என்னில் உன்னை கலந்துவிட்டாய்
உள்ளமெல்லாம் நிறைந்துவிட்டாய்
கள்ளச்சாவி போட்டே எந்தன்
கருவறையும் கடந்து விட்டாய்...!!!
தெளிவுமில்லை குழப்பமில்லை
விழிகள் திறந்தும் காட்சிகள் இல்லை
உறக்கம் கூட உந்தன் முகமதை
ம்றைத்துவிடவும் முடிவதில்லை...!!!
தேவன் உன்னை பூட்டிவைக்க
சேலை தன்னில் சிறையும் வைத்தேன்
முத்தம் தின்றும் முத்தம் தந்தும்
மொத்தம் என்னை களவு தந்தேன்...
யுத்தம் எத்தனை நடந்தால் என்ன
சித்தம் கூட உறைந்தால் என்ன
உதிரம் ஓடும் நரம்பில் கூட
உந்தன் நினைவே ஊறித்திளைக்க...
உனக்கும் எனக்கும் இடைவெளியில்லை
உள்ளங்கையின் வெதுவெதுப்பில்
உலகம் மறந்து வாழ்வோம் நாமே
ஊனில் உயிரில் கலந்த காதல்
உச்சம் தன்னை காண்போம் வாடா...!!!
EmoticonEmoticon