அவள் ஓடிவிட்டாள்.!

அவள் ஓடிவிட்டாள்.!

இரு,

இதோ வந்துவிடுகிறேன்
என்று சொல்லிவிட்டு
திடுதிடுவென
ஓடிப் போனாள் அவள்.
 
படாரென கதவிழுத்து
தலை தெறிக்க ஓடியதில்
சமநிலை திரும்பாமல்
இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது
பழைய தகரக் கதவு.
 
வழக்கம்போல
ஓடும் ஓட்டம் என்பதால்,
தெருவில் யாரும்
அவளைக் கவனிக்கவில்லை,
அவர்கள் யாருக்கும்
அதுபற்றிய
கவலையுமில்லை.
 
இடம் வந்தும்
இளைப்பாற நிற்காமல்
அங்கிருந்த
நெடும் வரிசையில்
தானும் நிற்கிறாள்,
அதற்காகவே
ஓடியும் வந்திருக்கிறாள்.
 
ஏன் ஓடினாள்
எங்கு ஓடினாள்
எதை வாங்க ஓடினாள்
யாரை இருக்கச் சொல்லி
ஓடினாள் என
எழும்பியிருக்கும்
ஏகப்பட்ட கேள்விகளின் பதில்
இறுதியில் கிடைக்கும்
பசியுடன் காத்திருப்போம்
அந்தத் தாய் வீடு திரும்பும்வரை.

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng