சாரலில் தோன்றிய
வானவில்
வானில் மறைந்தது
நெஞ்சில் நின்றது !
மலரிதழில் மிளிர்ந்த
பனித்துளிகள்
கதிரொளியில் மறைந்தது
நெஞ்சில் உதிர்ந்தது !
கனவில் விரிந்த
வண்ணங்கள்
பகலில் மறைந்தது
நினைவில் மலர்ந்தது !
கவிதையில் எழுதிய
வரிகள்
பொய்யில் மறைந்தது
புதிதாய் பூத்தது !
EmoticonEmoticon