என்னுள் உறைபவனே

பார்வையின் தூரம் குறைவே
பாராதிருப்பேன் என நினையாதே

போர்வைக்குள் நீ இருந்தும்
உன் விழிப்பும் அசைவும்
நான் அறிவேன்....

தேவையென வந்து நில்லாய்
தேவைக்குள் நீ என்றும் இல்லாய்
மாதவம் செய்தேனோ மண்ணில்
உன்னுள்ளம் தனில் நான் வாழ.,
உயர்வும் தாழ்வும் உனதில்லை எனதில்லை
நமதென்றே கொள்வோம்
நாசிக்குள் காற்றாய் உறைபவனே
நானென்றும் உனதடிமையடா...!!!!

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng