அக்கணநேர அச்சம்

இத்தனை அழகிய 
உடலை ஏன்
ஈக்கள் மொய்க்கின்றன??

அய்யகோ
காலினில் ஏன்
குறுதி வடிகிறது???

கட்டுப்போடுங்களேன்
இரஞ்சுகிறேன் 
மருத்துவர் காலடியில்

சட்டை செய்யாத 
அவரின் மேல் 
சட்டென கோபம் பற்றிட

முற்றிலும் புறம்பான
இவ்விடத்தில் என்னை
முழுதாய் விட்டவர் யார்???

அறையின் அத்தனை 
சுவர்களிலும் மோதித்
திரும்புகிறேன்...

அடுத்தடுத்து யார் யாரோ 
வந்து போக இங்கே
எனைச் சீண்டுவார் எவருமில்லை...

அறிமுகமில்லா முகங்கள்
அச்சம் வளர்க்க 
ஆண்டவா என கேவையில்

அறைகிறது செவியில்
இவன் அநாதை பிணமென்ற
அச்சொல்...!!!!

Previous
Next Post »