உன் நினைவுக் கீற்றுக்கள்

உந்தன் நினைவுகள்
 தினம் தினம் வடம் பிடிக்க.
தூண்டிலில் பட்ட மீனைப் போல
துடியாய் துடிக்கிறேன்.
 
உன்னை காணத போது..
காதல் என்ற போதையில்
அன்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் சொல்லியதும் நீதான்.
 
ஆத்தாக்கும்  அப்பனுக்கும் தெரியாமல்.
யாரும் நடமாடாத வீதியல் காத்திருந்து.
சைக்கிலில் ஏற்றிச் சென்ற காலங்கள்.
தனிமையில் வாழும் போது..
நினைவுகள் நீச்சல் போடுகிறது.
 
தென்னை ஓலையில் ஊதி செய்து.
 ஊதித் திரிந்த காலங்கள்
பனை மரத்தின் பனங்காயில்
தள்ளு வண்டி செய்து
 
நம்ம ஊரு வீதியெல்லாம் 
சுற்றி விளையாடிய காலங்கள்.
அந்த நினைவுகள் எல்லாம்
நெஞ்சோரம் உரசுகிறது.
 
கோயில் திருவிழ காலங்களில்
 கடை வீதியெங்கும்
கண்ணைச் சிமிட்டி
வர்ண யாலம்  காட்டும்
லைட் வெளிச்சத்தில்
கைகோர்த்து நடை பயின்ற காலங்கள்
எல்லா நினைவுகளும்
 வினாடிக்கு வினாடி
இதயத்தை சல்லடை
போட்டுத் தேடுகிறது.
அந்த நாள் ஞாபங்கள்.

Previous
Next Post »