Thursday, 5 November 2015

ஆற்றாமை

மாசிலா மனதில் 
குன்றா அறிவும்
நிறை தழும்பும் 
தெளி சிந்தையும்
வாய்க்கப் பெற்று
வரம்பில் வாழும்
வாச மென்மலர்
மேன்மை அறியார்
யான் வருந்துதல்
சிறு அற்பரை
உணரா சிறுமூளை
எங்கது முடிச்சு ?
நீக்கத் தெளிவு
காணும் அறிவு
கண் விழித்து
நோக்க களையும்
கற்பனை மாயை
செவி தீட்டி
பாெருள் புரிய
சிந்தை தூண்டி
செயல் முற்பட
ஏணை விகற்பம்
விலக்கிப் பாரும்
வாய்க்க இயலா
வாழ்வது விளங்கும்
வாஞ்சனை பெருக
வாரிக் கொள்வாய்
அருமை அறிவாய

No comments:

Post a Comment